கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.
சென்னை மாநகர காவல்நிலையங்களின் குளியல் அறைகளில் விசாரணை கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குளியலறைகளில் குற்றவாளிகள் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்றும் காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்ற கேள்விகள் எழுப்பட்டிருக்கிறது.
மேலும் காவல் நிலையத்தில் உள்ள குளியலறைகளில் முழுமையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுப்பதற்கு ஆணையர் என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுள்ளது. இதனிடையே அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராக புகார் அளித்த நாதமுனி என்பவரை அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றபோது குளியலறையில் வழுக்கி விழுந்ததாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…
நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…