நீக்கியவற்றை பாடத்தில் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டு இருந்தது.எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதாவது,மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 30 % பாடங்கள் குறைக்கப்படுவதற்காக அறிவிக்கப்பட்டது.ஆனால் இதை தமிழர்களின் வரலாறு,கலாச்சாரம் உள்ளிட்டவை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற சிபிஎஸ்இ பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் நோட்டா வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…