ரஷ்ய ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மாணவர்களின் உடல்களை விரைந்து மீட்கவேண்டும் என வைகோ வலியுறுத்தல்.
ரஷ்யாவில் வோல்கோகிராட் மாகாணத்தில் உள்ள வோல்கோகிராட் மாகாண மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த முகம்மது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன் விக்னேஷ் ஆகிய நான்கு மாணவர்களும் கடந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கழிப்பதற்காக வோல்கா ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இவர்கள் நால்வரும் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து மதிமுக நிறுவனர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டிய மாணவர்களின் எதிர்பாராத உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்ய ஆற்றில் மூழ்கி இறந்து போன 4 தமிழக மாணவர்களின் உடல்களையும் விரைந்து தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும் பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் பெற்று தங்கள் பிள்ளைகளை சிறந்த மருத்துவர்களாக உருவாக்க வேண்டும் என்ற கனவோடு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பெற்றோர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்கிற வகையில் தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…