ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் 22ம் தேதி சென்னை வந்தடையும் – எல். முருகன்.!

Published by
Ragi

ரஷ்யாவின் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்த தமிழ் மாணவர்களின் உடல்கள் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை வந்தடையும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வோல்காகிராட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு சென்று குளிக்கும் போது ஒரு மாணவரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. அவரை காப்பாற்ற முயற்சித்த சக மாணவர்களில் மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் மற்றும் சேலத்தை சேர்ந்த மனோஜ் என்பது தெரிய வந்துள்ளது.

இறந்த 4 பேரின் உடலை விரைவில் தமிழகம் கொண்டு வருமாறு மாணவர்களின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது மாணவர்களின் உடலை வரும் 22-ம் தேதி சென்னை கொண்டு வரப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழக மாணவர்களின் உடலை மீட்டு தமிழகம் கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியதாகவும், அதனையடுத்து ரஷ்யாவில் உள்ள தூதரகம் மூலம் உடலை மீட்டு கொண்டு வர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு. முரளிதரன் தெரிவித்ததாக கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் வந்துள்ள தகவலின்படி, வோல்காகிராட்டிலிருந்து மாணவர்களின் உடல்கள் மால்கோவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்று (18-8-2020) உடல்கள் இஸ்தான்புல் கொண்டுவரப்பட்டு, ஆகஸ்ட் 21 அன்று துருக்கி விமானம் மூலம் இஸ்தான்புல்லிருந்து புறப்பட்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உடல்கள் சென்னை வந்தடையும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழர் நலனுக்காக அயராது உழைக்கும் பாரத பிரதமருக்கும், தமிழர்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்பட்ட தூதரக அதிகாரிகளுக்கும், உடலை கொண்டு வர உறுதுணையாக இருந்து வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முரளிதரன் அவர்களுக்கு நன்றி என்று எல். முருகன் கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

16 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

17 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

17 hours ago