அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவவீரர் உடல் சொந்தவூரான காஞ்சிபுரம் வந்தடைந்தது!

Default Image

அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராயணுவவீரர் உடல் சொந்தவூர் வந்தடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளை கேட் அடுத்த, செம்பரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி குமாரி. இவருக்கு ஆதித்யா, ஜெனி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்த நிலையில், இந்த பணியில் இருந்து இவர் ஒய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில், பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில், தமிழாக்கத்தை சேர்ந்த ராணுவ வீரரான ஏகாம்பரம், சம்பா இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, ராணுவ வீரரான ஏகாம்பரத்தின் உடல், அவரது சொந்த ஊரான செம்பரப்பாக்கத்திற்கு வந்தடைந்த நிலையில், அவரது உடலுக்கு, மாவட்ட நிர்வாக சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. இவரது மறைவால், அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்