விறுவிறு விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு.! 30 நிமிட தாமதம்… 110 இடங்களில் வெப் கேமிரா.!

Published by
மணிகண்டன்

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி , நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர் மொத்தமாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.

தேர்தல் நடைமுறை வழக்கத்தை போல இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார். அதே போல, பனையபுரத்தில் உள்ள வாக்கு சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 276 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் 110 வாக்குசாவடிகளில் மட்டும் வெப் கேமிரா பொருத்தி வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதாமாக ஆரம்பிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல, 7 மாநிலங்களில் விக்கிரவண்டியுடன் சேர்த்து மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சட்டமன்ற தொகுதிகளுகான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர் இறப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்காக எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

33 minutes ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

42 minutes ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

2 hours ago

கோவா கோயில் திருவிழா.., கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!

கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…

3 hours ago

எல்லை மீறும் பாகிஸ்தான்., 9வது நாளாக தொடரும் காஷ்மீர் எல்லை தாக்குதல்!

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

3 hours ago

Live : திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…

4 hours ago