DMK Candidate Anniyur Siva - PMK Candidate C Anbumani
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு பின்னர், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி , நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர் மொத்தமாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.
தேர்தல் நடைமுறை வழக்கத்தை போல இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதுமே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முதல் ஆளாக தனது வாக்கினை செலுத்தினார். அதே போல, பனையபுரத்தில் உள்ள வாக்கு சாவடியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி தனது வாக்கினை செலுத்தினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 276 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் 110 வாக்குசாவடிகளில் மட்டும் வெப் கேமிரா பொருத்தி வாக்குப்பதிவு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட 5 வாக்குச்சாவடிகளில் மட்டும் இயந்திர கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதாமாக ஆரம்பிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவது போல, 7 மாநிலங்களில் விக்கிரவண்டியுடன் சேர்த்து மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளில் இன்று சட்டமன்ற தொகுதிகளுகான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர் இறப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்காக எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…