ஏழை குடும்பங்களுக்கு விரைவில் 2000 நிதியுதவி…. தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல்….

Published by
Kaliraj

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பை சமாளிக்கும் வகையில், ஏழை எளிய குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கும் தமிழக அரசின் புதிய திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின்  பாதிப்பால், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியிலான பாதிப்புகளில் இருந்து மீள்வது குறித்து ஆலோசனை வழங்க, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், சி. ரங்கராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தன் பரிந்துரைகளை, சமீபத்தில், முதல்வர் எடப்பாடி அவர்களிடம் அளித்துள்ளது.

அதில், ‘பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் வகையில், ஏழை, எளிய மக்களுக்கு, பண உதவி வழங்கலாம்’ என, அதில், குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில், அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, இந்த பண உதவியை வழங்குவது குறித்து, முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார்.’அம்மா கொரோனா பேரிடர் நிவாரண நிதி’ என்ற பெயரில், ஏழை, எளிய குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மட்டும், 3,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த திட்டத்தை வரும், நவம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார். நிர்வாக நடைமுறைகளுக்குப் பின், மிக விரைவில், இந்த நிதி, தமிழக அரசுக்கு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், மிக விரைவில், 2,000 ரூபாய் நிவாரண நிதி தொடர்பான அறிவிப்பை, தமிழக முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

7 hours ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

8 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

9 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

9 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

12 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

12 hours ago