#Breaking:ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீபா,தீபக் சேர்ப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published by
Edison

ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா அவர்கள்,கடந்த 2008,2009 ஆம் ஆண்டு செல்வ வரி கணக்கை செலுத்தவில்லை என்று வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.இதனை எதிர்த்து ஜெயலலிதா அவர்கள் வழக்கு தொடர்ந்த  நிலையில்,செல்வ வரி வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து,செல்வ வரி வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.இதனிடையே,கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தார்.

இதனையடுத்து,வேதா இல்லம் தொடர்பான வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது அவர்களை ஜெயலலிதாவுக்கு பதிலாக செல்வ வரி வழக்கில் சேர்க்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில்,கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வருமான வரித்துறையினர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் வழக்கில் ஜெ.தீபா.ஜெ.தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும்,வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா,தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறையினர் வழங்க வேண்டும் என்று கூறி அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

 

Recent Posts

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

36 minutes ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

1 hour ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

1 hour ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

2 hours ago

போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்த‌த்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!

அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…

2 hours ago