சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவு பெற்றதை அடுத்து,தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் புத்தாண்டின் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து,கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் உரையின் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்களின் பதில்கள் இடம் பெற்றன.
இதனையடுத்து,நடைபெற்ற கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறின.அதன்படி,கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் கூட்டுறவு சங்க திருத்த மசோதா மற்றும் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசுக்கழகங்கள்,சட்டப்பூர்வமான வாரியங்கள்,மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகார அமைப்புகளின் பணியிடங்கள் அனைத்தும் இனி டிஎன்பிஎஸ்சி மட்டுமே மேற்கொள்ளும் வகையில் டிஎன்பிஎஸ்சி சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில்,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நிறைவு பெற்றுள்ளது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…