அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் தம்பதியர் தகராறில் ஈடுபட்டனர்.
கோயமுத்தூரை சேர்ந்த ஒருவர், கல்லூரி விரிவுரையாளர் பணிக்காக கோபிசெட்டிபாளையம் ஒன்றிய அதிமுக செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் 2 ஆண்டுக்கு முன் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். வேலை கிடைக்காததால் பல முறை பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஒன்றிய செயலாளர் மனோகரன் பணத்தை தராமல் ஏமாற்றியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது மனைவி மற்றும் 6 வயது மகன், ஒன்றரை வயது கைக்குழந்தைகளுடன் கோபிசெட்டிபாளையத்திற்கு வந்தார்.
அப்போது, கோபிசெட்டிபாளையம் யூனியன் அலுவலகத்தில் இருந்த அமைச்சர் செங்கோட்டையனிடம் இது குறித்து புகார் அளிக்க முயன்றார். அமைச்சரை சந்திக்க நிர்வாகிகள் அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மற்றும் அவரது மனைவி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பெண் தான் அணிந்து இருந்த தாலியை கழற்றி வீசி ஏறிய முயன்றார். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்குள் தம்பதியரை அழைத்துச்சென்று சமரசம் செய்யும் முயற்சியில் ஒன்றிய அதிமுக செயலாளர் மனோகரன் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்கதவு, ஜன்னலை மூடினர். மனோகரன் முன்தேதியிட்ட காசோலையை அந்த நபரிடம் வழங்கியதை தொடர்ந்து தம்பதியர் அங்கிருந்து சென்றனர். இதேபோல், யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்காக நஞ்சை கோபி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் மனைவி லதா என்பவரிடம் ஒரு ஆண்டுக்கு முன் ரூ.2 லட்சத்தை ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன் பெற்றுள்ளார். ஆனால் லதாவிற்கு பணி வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் லதா தனது கணவர் சேகருடன் நேற்று யூனியன் அலுவலகத்தில் இருந்த ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் பணத்தை கேட்டு தகராறு செய்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அமைச்சர் முன்னிலையில் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…