கொரோனா தொற்று அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கேரளா மாநிலத்திலும் இதே நிலைதான் என்றாலும், அங்கு மதுவிற்கு அடிமையானவர்கள் மதுவின்றி தற்கொலை செய்துகொள்ளும் அவலம் அதிகமாக அரங்கேறியது.
இதன் காரணமாக மதுவுக்கு அடிமையானவர்கள் குறிப்பிட்ட அளவு மதுவை மருத்துவர்களின் பரிந்துரை படி மது வாங்கிக்கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று கேரள மருத்துவர்கள் கருப்பு துணி அணிந்துகொண்டு கருப்பு தினமாக அனுசரித்தனர்.எனவே கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றமானது, கேரள அரசின் இந்த முடிவுக்கு 3 வாரத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,மதுபோதைக்கு அடிமையானவர்களுக்கு போதை மீட்பு சிகிச்சை வழங்குவது தான் தீர்வு. மாறாக, அவர்களுக்கு அரசு மருத்துவர்கள் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் முடிவு அபத்தமானது. இதற்கு அறிவியல் ஆதாரமில்லை என்று கேரள அரசின் ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…