தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற மே 6,9 ஆகிய தேதிகள் முதல் மே 30,31 ஆகிய தேதிகள் வரை நடைபெறும் எனவும்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிவடையும் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இறுதித்தேர்வு இல்லை:
இந்நிலையில்,தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.எனினும்,6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது?:
இதனிடையே,9 ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் வருகின்ற மே 2 முதல் 4 வரை நடைபெறும் எனவும்,6 முதல் 9 ஆம் வரை உள்ள வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 30 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் தொடக்கம்:
மேலும்,நடப்பு கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13 ஆம் தேதி எனவும்,2022-23ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜுன் 13 ஆம் தேதி தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அதே வேளை 11 ஆம் வகுப்புக்கு மட்டும் ஜுன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…