சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக கைப்பற்றி 25 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கோட்டையாக மாற்றியுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது.இதில் திமுக 159 இடங்களிலும், அதிமுக 75 இடங்களிலும் கைப்பற்றியுள்ளது.மூன்றாவது அணியாக களமிறங்கிய மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளையும் திமுக 1996 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கைப்பற்றி ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது.சென்னை வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலானா வெற்றி பெற்றார். இதை தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராமை விட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் களம்கண்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…