ஆளுநர் ரவிக்கு எதிரான செயல்பாடு.. அமைச்சர் பொன்முடி குறிவைக்கப்படுகிறார்.! திமுக வழக்கறிஞர் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

ஆளுநர் ரவியை கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எதிர்ப்பதால் அமைச்சர் பொன்முடி குறிவைக்கப்படுகிறார் என திமுக வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். 

சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக நேற்று காலை 7:00 மணி முதல் சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் திமுக எம்பி கௌதம சிகாமணி ஆகியோர் வீடு அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இதில் ஒரு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு திமுக எம்.பி கௌதம சிகாமணி மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 7 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பினர்.

இந்நிலையில் இந்த அமலாக்கத்துறை விசாரணை சோதனை தொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 2007ல் தொடுக்கப்பட்ட வழக்கில், இப்போது விசாரணை நடத்தி எந்த ஆதாரங்களை வீட்டிற்குள் தேட போகிறீர்கள் என்று அமலாக்கத்துறை விசாரணை குறித்து விமர்சித்தார்.

மேலும் 70 வயதை கடந்த ஒரு நபரை (அமைச்சர் பொன்முடி) நேற்று காலை முதல் இன்று விடியற்காலை காலை 3 மணி வரை தொடர்ந்து விசாரணை நடத்திய உள்ளனர். ஏன் இந்த விசாரணையை இன்று நடத்தினால் ஆதாரங்கள் எதுவும் அழிந்து விடுமா? என்று கேள்வி எழுப்பினர். அடுத்ததாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எதிர்த்தவர் பொன்முடி அதனால் தான் அவர் குறிவைக்கப்படுகிறார் என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago