BJP State President Annamalai [File Image]
Annamalai : பிரச்சாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்கு அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ குறித்து தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 வார காலமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும்போது வாக்காளர்களிடம் பணம் கொடுப்பது போன்ற ஏதேனும் வீடியோ வெளியாகி விடுகிறது. பிறகு அதன் உண்மை தன்மையை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் கோவையில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்ட கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஒரு பெண்மணி ஆரத்தி எடுத்தார். அப்போது அவரது கையில் அண்ணாமலை எதோ கொடுப்பது போலவோ, அல்லது ஆரத்தி தட்டை தாங்கி பிடிப்பது போலவோ ஒரு வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.
இது குறித்து பதில் அளித்த கோவை மாவட்ட ஆட்சியர் (மாவட்ட தேர்தல் அலுவலர்), அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்த வீடியோ குறித்து அதன் உண்மை தன்மை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். முன்னதாக, ராமநாதபுரம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடன் புகைப்படம் எடுத்த ஒரு நபருக்கு பணம் கொடுத்ததாக ஒரு விடியோவும் பரவியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…