ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுனமூர்த்தி என்பவர் எனது தந்தை முரோசொலி மாறனின் ஆலோசகர் என்பது தவறான செய்தி என தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
ரஜினி அவர்கள் வருகின்ற ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்பரையும் நியமித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி அவர்கள் முன்னாள் பாஜக நிர்வாகி மட்டுமல்லாமல், மறைந்த முரொசொலி மாறனுடைய ஆலோசகராகவும் பணியாற்றியவர் என தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், இது குறித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஜினி அவர்களால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.அர்ஜுனமூர்த்தி அவர்கள் மறைந்த எனது தந்தை முரசொலி மாறனின் ஆலோசகராக பணியாற்றியவர் என சில சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்தி தவறானது. இது முற்றிலும் பொய், எனது தந்தைக்கு எவரும் ஆலோசகராக இருந்ததில்லை, இது போன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…