2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேச்சு.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கயிருப்பதால் திமுகவும், அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்க உள்ளன. அதேபோல வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகவுள்ளது. இவ்வாறு தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், 2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவையாக அமையும் . அதிமுகவிற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் எனக்கு மட்டும் விஸ்வாசமாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியதில்லை என்று கூறியுள்ளார். எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும், எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…