மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.6000-ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மீன்பிடி தடைகாலத்தில் நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,மீன்பிடி தடைகாலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.6000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில்,தேர்தல் வாக்குறுதியின்படி,நடப்பாண்டு முதல் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.80 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு,ரூ.108 கோடி மதிப்பில் குடும்பம் ஒன்றிற்கு ரூ.6000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 11 கடலோர மாவட்டங்களில் 1.24 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…