பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக பாஜக மாநில தலைவர் எல் முருகன் தலைமையை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். ஆகையால், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அல்லது நாளை கண்டிப்பாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை சரியாக 11 மணியளவில் தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சனி, ஞாயிறை தவிர வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கியதா அடுத்து, பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார்.
வெற்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பாஜக சார்பாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். 5வது முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன். தொகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பேன். பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே வேட்பு மனுதாக்கல் செய்ததற்கு நல்ல நேரம் தான் காரணம் எனக் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் தனி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…