சண்முகநாதன் அவர்களின் இழப்பு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும் – விஜயகாந்த்

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் ட்வீட்.
முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் உதவியாளர் கோ. சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சற்று முன் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் தனி உதவியாளராக பணியாற்றிய திரு. சண்முகநாதன் அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். கலைஞர் அவர்களின் 50 ஆண்டு கால தனி உதவியாளராக பணியாற்றிய திரு. சண்முகநாதன் அனைவருடன் அன்புடன் பழகுபவர்.
என்னுடன் எப்போதும் மிகுந்த அன்பும் நட்பும் கொண்டவர். கலைஞர் அவர்களின் நிழலாக வாழ்ந்த திரு.சண்முகநாதன் அவர்களின் இழப்பு,ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
என்னுடன் எப்போதும் மிகுந்த அன்பும் நட்பும் கொண்டவர். கலைஞர் அவர்களின் நிழலாக வாழ்ந்த திரு.சண்முகநாதன் அவர்களின் இழப்பு,ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். (2-2) pic.twitter.com/kQfIXTuZum— Vijayakant (@iVijayakant) December 21, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025