தமிழ்நாட்டில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கி நேற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வருகின்ற 6 ஆம் தேதி பதவியேற்று கொள்வார்கள்.பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 77.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேர்தல் முறைகேடு எங்காவது நடைபெற்றுள்ளது என உரிய ஆதாரத்துடன் புகார் வந்தால் அதுகுறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். 90% தேர்தல் முடிவுகள் பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு சில வழிமுறைகள் எடுக்க வேண்டி உள்ள காரணத்தால் அதனை விரைவில் முடித்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.எங்களை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூறியுள்ள புகார்கள் மீது எந்தவொரு பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளதுஎன்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…