புதுச்சேரி பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் கொரோனா கட்டுப்படுத்துவது ஆலோசனைக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பேசிய முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு சென்னை,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வருவோர்தான். இதனால், எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றினால் ஏற்கெனவே ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இனி ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இன்று முதல் 10 நாட்களுக்கு கடைகள் காலை 6 மணி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். மதுக்கடைகள் 2 மணிக்குள் மூட வேண்டும்.
கடற்கரை சாலையும் 10 நாட்களுக்கு மூடப்படும். இந்த உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழிற்சாலைகள் இயங்கும், தொழிலாளிகளுக்கு அனுமதி பாஸ் வழங்கப்படும் என நாராயணசாமி தெரிவித்தார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…