கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
மேலும் போலீசார் பல மாநிலங்களிலும் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரை துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள தங்க நகைகளை கொள்ளையடித்தது சென்றனர்.
இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில் கொள்ளையன் முருகன் கும்பல் தான் கொள்ளையடித்தது தெரியவந்தது.பின்னர் இந்த கும்பல்தான் சமயபுரத்தில் நடைபெற்ற கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. போலீசார் 9 மாதங்களாக திணறி வந்த இந்த வழக்கில் தற்போது கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர்.
இதனால் போலீசார் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொள்ளையர்களை பிடித்ததால் இரண்டு போலீசார்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்படி திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் விஜயகுமார் ஒப்பிலியப்பன் கோவிலிலும் , ஹரிஹரன் என்பவர் சமயபுரத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…