உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி சரிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி.
உத்தரமேரூர் அருகே உள்ள மதூரில் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் பாறைகளை உடைக்க வெடி பொருட்களை பயன்படுத்தி உடைப்பது வழக்கம். வெடி பொருட்களை பயன்படுத்துவதால், வீடுகள் சேதம் அடைவதாக பொதுமக்கள் குற்றம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அந்த கல் குவாரியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பகுதியில் இருந்த பாறை கற்கள் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலரின் மீது பெரிய கற்கள் விழுந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…