“எனக்கு வந்த வேண்டுகோள்;இதற்கு முதல்வர் வழிவகை செய்ய வேண்டும்” – ஓபிஎஸ் கோரிக்கை….!

Published by
Edison

மதுரையில் பெண்பாற்புலவர் இளவெயினிக்கு நூலகத்தோடு கூடிய முழு உருவச் சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை நிறுவ வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைக்க முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சங்ககால மன்னர்களால் போற்றப்பட்டவர்:

“சங்ககாலத்தில், குறவர் குடியிலே பெண்ணாகப் பிறந்து, இளமைக் காலத்திலேயே புலமை பெற்று, பெரும் புலவராய் விளங்கியவரும், உலகில் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழ் மொழியை வளர்ப்பதில் தன்னுடைய பங்களிப்பை நல்கியவரும், சங்ககால மன்னர்களால் போற்றப்பட்டவரும், தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்தவருமான பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்கள் இரண்டாம் நூற்றாண்டில் பதினைந்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவருடைய பாடல்கள் குறித்தும், இவர் தமிழர் பழங்குடி மரபைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் புறநானூற்றின் 157-வது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக உயர்விற்கு வழிகாட்டி:

தன்னுடைய தலைவன் ஏறைக்கோனைப் பாராட்டும் பாடலில், நம்மோடு நட்பு கொண்டு நெடுநாள் பழகி வாழ்பவர் ஒரு முறை தவறு செய்துவிட்டால் அவரைப் பகைத்துக் கொண்டு அவருக்கு துயர் தருதல் சான்றோர் செயல் அல்ல என்றும் ;”நாடெல்லாம் வாழ கேடொன்றும் இல்லை” என்ற உண்மையை உணர்ந்து தன்னைப் போன்றே உலகோர் அனைவரும் உயர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பி அதற்காக உழைப்பதே தனக்கும் பிறர்க்கும் நலம் தருவதாம் என்றும்;

“எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எம்முறையைக் கையாண்டாவது வெற்றி பெற வேண்டும்” என்பது பேடிச் செயல் என்பதோடு, உண்மை வீரன், வெற்றி தரும் வழி பழி தரும் வழியாக இருத்தல்கூடாது என்ற கருத்தினைக் கொண்டிருப்பான் என்றும் தெரிவித்து, இந்த முப்பெரும் குணங்களை தன் தலைவன் பெற்றிருக்கிறான் என்று தெரிவித்து உலக உயர்விற்கு வழிகாட்டியாய் நின்று அறிவுரை கூறியவர் பெண்பார் புலவர் குறமகள் இளவெயினி அவர்கள்.

இளவெயினிக்கு அதிமுக கொடுத்த அங்கீகாரம்:

தமிழ் இலக்கியத்திற்கு குறமகள் இளவெயினி அவர்கள் ஆற்றிய பணியை போற்றிடும் வகையில், அவர் உருவாக்கிய இலக்கியப் பாடல்கள் மற்றும் அவரது முழு உருவப்படத்தை பன்னிரெண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் 2019 ஆம் ஆண்டு சேர்த்து, அதன்மூலம் அவருக்கு ஓர் அங்கீகாரத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கியது.

எனக்கு வந்த வேண்டுகோள்:

இந்தச் சூழ்நிலையில், அவரது நினைவை போற்றிடும் வகையிலும், அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திடும் வகையிலும், தமிழ் மொழிக்கான இவரது பங்களிப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணமும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பெண்பாற்புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு நூலகத்தோடு கூடிய முழு உருவச் சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை நிறுவ வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், வனவேங்கைகள் கட்சி சார்பிலும் எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு, அந்த மனுவின் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதல்வருக்கு எனது கோரிக்கை:

சங்க காலத்திலேயே தமிழர் பழங்குடி மரபைச் சார்ந்த பெண் ஒருவர் பெரும் புலவராய் விளங்கினார் என்பது பாராட்டிற்கும், போற்றுதலுக்கும் உரிய ஒரு செயல் என்பதால், குறமகள் இளவெயினி அவர்களுக்கு ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த’ மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு மதுரையில் நூலகத்துடன் கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

4 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

4 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

5 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

6 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

7 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

7 hours ago