#Breaking:தமிழக சிறப்பு டிஜிபி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற – உச்சநீதிமன்றம் மறுப்பு…!

Published by
Edison

தன்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழக சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து, விசாரித்திருந்தனர்.இதனையடுத்து,சிறப்பு டி.ஜி.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து,இந்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது,”காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் டிஜிபிக்கு  எதிராக செயல்படுகிறார்கள்”, என்ற குற்றச்சாட்டை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள தமிழக சிறப்பு டிஜிபியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்திருந்தார் .

எனவே,அவர்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதனையடுத்து,தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்:”பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ள டிஜிபி மீதான குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவை அல்ல,அவை மிகவும் தீவிரமானவை.எனவே,இந்த வழக்கு விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது”,என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதிகள்,பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்,சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த புகார் தொடர்பான கண்காணிப்பை செய்யக்கூடிய முடிவையும் ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

எனவே,இந்த வழக்கு தமிழகத்தில்தான் நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவாக்கியுள்ளது.

Published by
Edison

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

1 hour ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

1 hour ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

3 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

3 hours ago