உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக, திமுக கண்ணாமூச்சி விளையாடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.எனவே தமிழகத்தில் உள்ள கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன.இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,ஆளும் கட்சியும், ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலை பற்றி எந்த கவலையும் இல்லாமல், இரு கட்சிகளும் தங்கள் சுயநலத்துக்காக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
மூன்று ஆண்டுகளாக’ “புலி வருது புலி வருது'” என்பது போல் அரசு தேர்தல் நடத்தப்போவதாகவும் அறிவிப்பதும், அதன் பிறகு அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்துக்கு போவதும் என உள்ளாட்சி தேர்தலை வைத்து கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தி வருகின்றனர்.
தமிழக மக்கள் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில், இந்த இரண்டு கட்சிகளையும் அடையாளம் கண்டு, புறகணிப்பது தான் உண்மையான மக்களாட்சி உருவாதற்கு வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…