நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு ரூ.150 கோடி மானியத்தொகை – தமிழக அரசு உத்தரவு!

Published by
Edison

சென்னை:கூட்டுறவு சங்கங்களின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மானியமாக ரூ.150 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பொது விநியோக முறை கூட்டுறவு சங்கங்களின்கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்காக 2020-2021 ஆம் ஆண்டிற்கான ரூ.150 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும்,மண்டல இணைப் பதிவாளர்கள் PDS I & PDS II பொது விநியோக முறையை இயக்கும் முகவர் நிறுவனங்களுக்குத் தொகையை ஒதுக்கீடு செய்து,சென்னை கூட்டுறவு சங்கப் பதிவாளரால் ஒதுக்கப்பட்ட தொகை முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பாக,ஒவ்வொரு சொசைட்டிக்கும் உரிய மானியத் தொகையானது, மண்டல இணைப் பதிவாளரால் விகிதாச்சாரப்படி,நேர விரயம் ஏதுமின்றி உடனடியாக ஒரு நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்டு,அவ்வாறு விடுவிக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட சங்கங்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும்,கூட்டுப் பதிவாளர்கள் தங்கள் கணக்குப் புத்தகங்களில் தகுந்த சரிசெய்தல் உள்ளீடுகளைச் செய்ய சங்கங்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மானியத் தொகையை சிறிது சிறிதாக வழங்கக் கூடாது என்று இணைப் பதிவாளர்களுக்குக் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

Recent Posts

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

2 minutes ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

17 minutes ago

பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்.! திரைப்பிரபலங்கள் இரங்கல்…

டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…

35 minutes ago

”கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை” – வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…

1 hour ago

மிரட்டும் கனமழை.!! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…

2 hours ago

PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…

2 hours ago