சென்னை:கூட்டுறவு சங்கங்களின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்காக ரூ.150 கோடி மானியத்தொகை விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மானியமாக ரூ.150 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,பொது விநியோக முறை கூட்டுறவு சங்கங்களின்கீழ் நஷ்டத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு ஏற்படும் நஷ்டத்திற்காக 2020-2021 ஆம் ஆண்டிற்கான ரூ.150 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும்,மண்டல இணைப் பதிவாளர்கள் PDS I & PDS II பொது விநியோக முறையை இயக்கும் முகவர் நிறுவனங்களுக்குத் தொகையை ஒதுக்கீடு செய்து,சென்னை கூட்டுறவு சங்கப் பதிவாளரால் ஒதுக்கப்பட்ட தொகை முறையாக வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக,ஒவ்வொரு சொசைட்டிக்கும் உரிய மானியத் தொகையானது, மண்டல இணைப் பதிவாளரால் விகிதாச்சாரப்படி,நேர விரயம் ஏதுமின்றி உடனடியாக ஒரு நடவடிக்கை மூலம் விடுவிக்கப்பட்டு,அவ்வாறு விடுவிக்கப்பட்ட தொகை சம்பந்தப்பட்ட சங்கங்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும்,கூட்டுப் பதிவாளர்கள் தங்கள் கணக்குப் புத்தகங்களில் தகுந்த சரிசெய்தல் உள்ளீடுகளைச் செய்ய சங்கங்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மானியத் தொகையை சிறிது சிறிதாக வழங்கக் கூடாது என்று இணைப் பதிவாளர்களுக்குக் கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…