இன்று வைகோ மீதான அவதூறு வழக்கில் தீர்ப்பு

வைகோ 75 வயதிலும் அரசியல் நிகழ்ச்சிகள், போராட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு வருவதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன் ரத்த அழுத்தம் பிரச்சனை காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதிமுக பொது செயலாளர் வைகோ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் .இதனையடுத்து நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் 2006-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து வைகோ மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.வைகோ தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.இதனைத்தொடர்ந்து கடந்த 26-ஆம் தேதி விசாரணைக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வைகோவால் ஆஜராக இயலவில்லை .இதனால் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்த நிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025