குடும்பப் பிரச்னையில் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய இளைஞர், துாக்கிட்டுத் தற்கொலை செய்த்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் இவர் 19 வயதான சதீஸ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடிஐ நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார், இந்நிலையில் கடந்த 18ம் தேதி சதீஸ்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் சதீஸ்குமாரை அவரது சகோதரர் மற்றும் தந்தை அடித்துள்ளனர் இதனால் சோகமடைந்த சதீஸ்குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது போனில் அவருக்கு அவரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் டிசைன் செய்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினார், உடனடியாக பதற்றமடைந்த அவரது நண்பர்கள் வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்,உடனடியாக சதீஸ்குமாரை பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும்அவரை தேடினர் ஆனால் சதீஸ்குமாரை ஒரு நாள் முழுவதும் காணவில்லை.
இந்த நிலையில் அடுத்த நாள் சதீஸ்குமார் மழவராயன்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் தூக்கிட்டு சடலமாகக் சதீஸ்குமார் கிடந்தார், சதீஸ்குமார் உடலை அவரது பெற்றோர்கள் உருமநாதபுரம் சுடுகாட்டில் இறுதிச் சடங்கை முடித்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி, போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், சதீஷ்குமாரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…