வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து.
விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சமூக நீதி என்று கூறுகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறா அல்லது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறாரா என்று தெரியவில்லை. சமீபத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 2 முக்கிய பகுதி என்பது உள்ளது. அதில், மாநில அரசுக்கு இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது என தெரிவித்தார்.
10.5 சதவீத இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை. 30 ஆண்டு காலத்திற்கு முன் எடுக்கப்பட்ட அம்பா சங்கர் குழுவின் சாதிவாரிக் கணக்கெடுப்பு இப்போது ஏற்கக் கூடியதல்ல என்று தெளிவாக சொல்லியுள்ளது. மதுரை உயர் நீதிமன்றத்தில் முழுமையாக தரவுகள் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என குற்றசாட்டினார். மேலும் தமிழகத்தில் மின்வெட்டு குறித்து தமிழக அரசை விமர்சித்தார். இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திடம், தற்போது மாவட்ட செயலாளராக உள்ளீர்கள், மாநில பொறுப்பு கேட்கப்பட்டதாக தகவல் வருகின்றதே என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இருக்கிற பொறுப்புக்கே வேலை இல்ல, இதுல மாநில பொறுப்பு வேற என்று விரக்தியில் பதிலளித்தார்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…