விவசாயிகள் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்கும் சட்டத்திருத்தம் – தமிழக அரசு.
விவசாயிகள் வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. எந்த சூழ்நிலைகளில் விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என அவசர சட்டம் பிறப்பித்தது தமிழக அரசு. தமிழநாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டத்தில் திருத்தும் செய்து தற்போது அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அவசர சட்டத்தால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பயிரை விற்கலாம். அவசர சட்டத்தால் விளைபொருட்களை தனியார் சந்தை, கிடங்கு, குளிர்பதன மையங்களிலும் விற்பனை செய்யலாம். விளைபொருளை தங்கள் பண்ணை, உணவுபூங்காவில் அங்கீகரித்து வணிகர்களுக்கு நேரடியாக விற்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விற்பனை குழுக்களின் தனி அலுவலர் பதிவிக்காலத்தை 6 மாதங்கள் நீடித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 1987 சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்ய, விற்பனை குழுக்களின் தனி அலுவலர்களின் பதிவிக்காலத்தை நீடிக்க அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையின் பேரில், அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…