வெள்ளை அறிக்கை வெளியிடுவதன் மூலம்,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல்,திமுக அரசு மக்களை திசை திருப்புகிறார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், இன்று காலை 11:30 மணியளவில் தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு,இது தொடர்பான விளக்கத்தையும் அளித்தார்.
இந்நிலையில்,வெள்ளை அறிக்கை வெளியிடுவதன் மூலம்,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல்,திமுக அரசு மக்களை திசை திருப்புகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளரிடம் காணொளி வாயிலாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
“வெள்ளை அறிக்கை வெளியிட்டு,தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல்,திமுக அரசு மக்களை திசை திருப்புகிறது சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில்,முன்கூட்டியே வெள்ளை அறிக்கை வெளியிடுவது ஏன்?”,என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்,2006 – 2011 ஆம் ஆண்டு வரையிலான வெள்ளை அறிக்கையை திமுக அரசு கொடுக்க வேண்டும்.2010- 2011ஆம் ஆண்டில் திமுக அரசின் தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் சொந்த வருவாய் 8.17% ,ஆனால்,அதிமுக ஆட்சிக்காலத்தில் 8.34% ஆக இருந்தது என்று குறிப்பிட்டார்.
மேலும்,சொத்து வரி,போக்குவரத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை?யாரிடம் வரியை வாங்குவது என்று அதிமுக அரசுக்கு தெரியவில்லை என்று திமுக அரசு கூறியது,இது தொடர்பாக நீங்கள் கூறுவது என்ன? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் அவர்கள்,”அதிமுக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் திமுக அரசு உயர்த்த போவதாக சொல்கிறதா? என்று கூறினார்.மேலும்,முன்னதாக திமுக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்தபோது விட்டுசென்ற கடனுக்கு,அதன்பின் பொறுப்பேற்ற அதிமுக அரசுதான் வட்டி கட்டியது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…