திருமாவளனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்- வேலூர் இப்ராஹிம்..!

Published by
murugan

கோவையிலுள்ள பாஜக அலுவலகத்தில் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. ஆனால், இந்து, முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், திராவிட கட்சிகள் இடையூறு ஏற்படுத்துகின்றன.

மதநல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்லும் போது அதைக் குலைக்கும் விதமாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், இந்து மதத்தை இழிவு படுத்துகிறார். இரு பிள்ளைகளை வளர்ப்பதாக இருந்தால் ஒரு பிள்ளையை கண்டிப்போடு வளர்த்து, இன்னொரு பிள்ளையை கண்டிப்பு இல்லாமல் வளர்க்கும் சூழ்நிலை எந்த ஒரு தகப்பனும் செய்யமாட்டான்.

திருமாவளவன் நேர்மையானவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும். அவர், இந்து மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது போன்று இஸ்லாம் காட்டாத வழியை தீவிரவாதத்தை, வன்முறையை பிஎஃப்ஐ இன்னும் ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் செய்கிறார்கள் என்றால் அதை தட்டி கேட்க வேண்டும்.

ஆனால், அவர் இஸ்லாமியர் மக்கள் மத்தியில் பகவத் கீதையையும், இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களையும் கேவலப்படுத்தி வருகிறார், கொச்சைப்படுத்துகிறார் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயலை திருமாவளவன் தொடர்ந்து செய்தால் அவரது சேலை கட்டும் போராட்டம் அறிவிப்போம் என வேலுார் இப்ராஹிம் கூறினார்.

Published by
murugan

Recent Posts

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

2 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

3 hours ago

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

4 hours ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

4 hours ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

12 hours ago