பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம், திருமாவளவன் கண்டனம்!

Published by
Rebekal

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் புதுநகரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ் ரஞ்சித் அசோக் ஆகிய மூன்று காவலர்கள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் சிலைக்கு மரியாதை செய்வதற்காக மாலை அணிவித்து உள்ளனர். இந்நிலையில் இவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக அவர்கள் மூவரும் கள்ளகுறிச்சி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்கள் பெரியார் சிலைக்கும், அண்ணா சிலைக்கு காவியுடை அணிவித்து காவி சாயத்தை ஊற்றி அவமரியாதை செய்பவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு முன்வராத தமிழக அரசு, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்களையும் பணியிடமாற்றம் செய்து தண்டித்து இருப்பது வேதனை அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி நடைபெறுகிறதா? ஆர்எஸ்எஸ் ஆட்சி நடைபெறுகிறதா? என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.  சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததில் என்ன குற்றம் என்றும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் மூவருமே இதுவரை எந்த ஒரு புகாருக்கு ஆளாகாதவர்கள் எனவும் அப்படி இருக்கையில் இவ்வாறு பணியிடமாற்றம் செய்வது தண்டிப்பது ஏற்புடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் மீண்டும் மூவரையும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்திலேயே தொடர்ந்து பணியாற்ற ஆணையிட வேண்டும் எனவும் பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் இயங்க கூடிய ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடந்து வரக்கூடிய அதிமுக ஆட்சி என்பதை உறுதிப்படுத்துவதற்கு இதுதான் சான்றாக இருக்கும் எனவும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துவதாக திருமாவளவன் அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

8 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

8 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

9 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

9 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

10 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

11 hours ago