திடீர் ஐ.டி. ரெய்டு! உளவியல் ரீதியாக நெருக்கடி.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது.

சிதம்பரத்தில் தனி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன், கடந்த ஒரு வாரமாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் திடீரென வருமான வரித்துறையின் நேற்று சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள விசிக நிர்வாகி ஒருவர் வீட்டில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தங்கி மக்களவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று மாலை சுமார் இரண்டரை மணிநேரம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனையில் எதாவது கைப்பற்றப்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர் இன்று ஆஜராக வேண்டும் என வருமான வரித்துறையினர் சம்மன் அளித்துள்ளனர். இந்த சோதனை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு அறையும், பெட்டிகளையும் திறந்து பார்த்துள்ளார்கள்.

இந்த சோதனையில் எதுவும் கிடைக்கததால் திரும்பி சென்றனர். எந்த முகாந்திரமும் இல்லாமல் சோதனை நடத்துவது மறைமுகம் அல்லது வெளிப்படையான அச்சுறுத்தலாக பார்க்கிறோம். இது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே பொருளாதாரத்தில் பின்தங்கிய கட்சி. மக்களிடம் இருந்து பெறும் கொடைத்தொகையை வைத்து மாநாடு, பேரணி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம் .

இந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இப்படி தான் இயங்கி வருகிறோம். இதுவரை வருமான வரித்துறை எங்களை சோதித்ததாக சரித்திரம் இல்லை. உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பாஜக அல்லது பாஜக ஆதரவு நபர்களிடம் இதுபோன்ற சோதனை நடத்தியதாக எந்த சான்றுகள் இல்லை. எனவே, அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Recent Posts

“இங்கிலாந்தை வீழ்த்த எங்க கேப்டன் கில் ரெடியா இருக்காரு” குல்தீப் யாதவ் பேச்சு!

லீட்ஸ் : சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், அடுத்ததாக யார் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின்…

2 hours ago

திக் திக்கை ஏற்படுத்தும் காந்தாரா! விபத்தில் உயிர் பிழைத்த நடிகர் ரிஷப் ஷெட்டி!

கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.…

2 hours ago

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு!

டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியத் தலைவருமான சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில்…

3 hours ago

அகமதாபாத் விமான விபத்து – இன்று கூடுகிறது உயர்மட்டக்குழு!

அகமதாபாத் :  விமான நிலையத்தில் சமீபத்தில் நடந்த விமான விபத்து இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜூன் 12 அன்று,…

4 hours ago

ஈரான் தலைவர் கமேனியை கொல்ல திட்டம்? டிரம்ப் தடுத்து நிறுத்தினாரா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஈரானின் உச்ச…

4 hours ago

இஸ்ரேல் – ஈரான் மோதல்…இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்?

டெல்லி : இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தி…

4 hours ago