கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட்- திருமாவளவன் கண்டனம் ..!

Published by
murugan

பாஜக அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின் மீது 35 சதவீதம் கூடுதல் வரியும், கொண்டைக்கடலை மீது 50 சதவீதம் கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களையும், விற்கப் போவதாக நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளார். பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் மக்கள் விரோத பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண்துறை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூடுதல் வரி ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், பருப்பு வகை மீது தாங்க முடியாத அளவுக்கு வரிச்சுமையை ஏற்கிறது. நாட்டை விலை பேசி விற்பதாகவும், மக்களின் மீது வரிச்சுமையை கூட்டுவதாகவும் உள்ள இந்த பட்ஜெட்டுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டனம் தெரிவிக்கிறோம்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி கொண்டிருக்கும் நிலையில் யூரியா மீது கூடுதல் வரியை விதித்து மேலும் அவர்களை வாட்டி வதைக்க முடிவு செய்திருக்கிறது இந்த அரசு. அதுமட்டுமின்றி மின் வினியோகத்தை தனியாரிடம் கொடுப்பதென்ற முடிவு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கான தொடக்கமே ஆகும்.

எல்ஐசியின் பங்குகளை விற்க போவதாக கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார்கள்.  இப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் 74 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு கூறுகள் திட்டத்தை முற்றாகக் கைவிட்டு விட்ட பாஜக அரசு, அவர்களுக்கான ஒதுக்கீட்டையும் கணிசமாக குறைந்துவிட்டது. ஏசி மாணவர்களுக்கு “போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப்” திட்டத்தை கைவிட பாஜக அரசு முடிவு செய்த போது அதை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சி மட்டும்தான் போராடியது.

அதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு ஆதரவோடு அறிவித்திருக்கும் தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்த ஜிடிபியில் 6 சதவீதம் ஒதுக்கபடும் என கூறியிருந்தனர். ஆனால் அதில் பாதி அளவு கூட இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. உயர்கல்வி முழுவதையும் மத்திய அரசின் கைகளில்  எடுத்துக் கொள்வதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாபெரும் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன்களுக்காகவும் கூட எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி வரி சலுகை வழங்கப்படும் என ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் ஆசை நிராசை ஆகிவிட்டது. பாஜக அரசின் இந்த பட்ஜெட்டில் ஆப்பிள் பழத்தின் மீது 35 சதவீதம் கூடுதல் வரியும், கொண்டைக்கடலை மீது 50 சதவீதம் கூடுதல் வரியும், சமையல் எண்ணெய் மீது 20 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது ஏழை எளிய மக்கள் மீது மேலும் அவதிக்குள்ளாகும் நிலையே ஏற்படும். பட்ஜெட்டில் 3% பற்றாக்குறை  மட்டுமே அனுமத்திக்கப்படும். ஆனால் இந்த பட்ஜெட்டில் 9.5 பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது 15 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை சமாளிக்கவே நாட்டின் சொத்துக்களை விற்கும் மக்கள் மீது கூடுதல் வரி விதிக்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த பட்ஜெட்டின் மூலம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி அதிகமாகுமே தவிர குறையாது. வழக்கம் போல வெகு மக்கள் விரோத பட்ஜெட் தாக்கல் செய்துள்ள பாஜகவின் கார்ப்பரேட் அரசுக்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

9 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago