விஜய் பிரபாகரன் : நாடுளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றைய நாள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக மக்களவை தொகுதிகளான 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே கைப்பற்றி உள்ளது. அதில் மக்களவை தொகுதியான விருதுநகரில் நேற்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது.
தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த விஜய் பிரபாகரன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூரிடம் (3,85,256) 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்றிருந்தார். இதன் மூலம் குறைந்த வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார். இந்த தோல்விக்கு பிறகு விஜய் பிரபாகரன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், “வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி கூறி, மன்னிக்கவும் தோழர்களே மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். இது முடிவல்ல ஆரம்பம் தான்”, என அவர் பதிவிட்டிருந்தார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…