கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் தனியார் மஹாலில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், கடவுள் இல்லை என்று சொல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுர முத்திரையை பயன்படுத்துகிறார். கடவுள் இருக்கிறார் என்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதுவே திமுகவின் கடைசி ஆட்சி காலம், இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை. பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரத் தயாராக உள்ளது. தற்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் என்றும் அடுத்த 5 வருடங்களில் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பர் எனவும் கூறினர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. திமுக ஒரு குடும்ப அரசியல் கட்சி, பாஜக மட்டுமே பொறுப்புகள் உங்களை தேடி வரும். வழக்கு போட்டு மிரட்டினாலும், எதற்கும் பயப்பட கூடிய ஆள் இல்லை என தெரிவித்தார். அடைகாத்த கோழி போல பொத்தி பொத்தி வைத்தாலும் உதயநிதி ஸ்டாலினை எப்போதும் தலைவராக முடியாது என்றும் முன்னதாக தெரிவித்திருந்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…