கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பதற்கு காரணம் குறித்து ப.சிதம்பரம் ட்வீட்.
பெட்ரோல், டீசல் விலை சர்வதேச எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில், ஏற்றம், இறக்கம் காணபப்டுவதுண்டு. நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த 21 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி உள்ளது .
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது தொடர்பாக விமர்சித்துள்ளார். கடந்த 21 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஏனெனில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை மாதம் 19-ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் ஆகிறது.
பெகாசஸ் மென்பொருள் கருவி செல்போனில் ஊடுருவி இருப்பதாலும், இஸ்ரேலியர்கள் கேட்டு கொண்டிருப்பதாலும் எண்ணை நிறுவனங்களின் சந்தை படுத்துதல் தலைமை அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அனைத்து துறையின் தலைமை அதிகாரிகள் 15-ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவற்றின் காரணமாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…