CM MK Stalin announced Relief Fund [Arun Sankar/AFP]
கடந்த மாதம் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இம்மாதம் 3-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மிசோராம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கமும் ஆட்சியை பிடித்தன.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவை தேர்தலில் மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் வாக்களிக்கின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெறும். மூன்று மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்காது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு… அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!
மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவர் பேசுகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஏற்கனவே பல சந்திப்புகளை நடாத்தியுள்ளோம். மாநில நலனில் அக்கறை செலுத்தி ஆளுநர் செயல்பட்டால் நன்றாக இருக்கும். தமிழ்நாடு வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் செயல்படுவதை நிறுத்த வேண்டும். நேரில் சந்தித்த போது, இனிமையாக பேசிய ஆளுநர் தமிழக வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் மழைபாதிப்பை ஒழுங்காக கையாளவில்லை. அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகத்தான் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக, புயல் சேதத்தை பார்வையிட வந்த ஒன்றிய அரசு குழு பாராட்டியுள்ளது. என்னை சந்தித்த ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டினார் என தெரிவித்து உள்ளார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…