ஜூலை 1 முதல் மதுரை கோட்டத்திற்குட்பட்ட விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், மதுரை – சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் இரவு 8.40 மணிக்கு பதில் 8.45க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் அதிகாலை 5.45க்கு பதில் 5.30க்கு மதுரை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் மதுரையிலிருந்து மதியம் 03.15 மணிக்கு பதில் 03.20க்கு புறப்படும், மறுமார்க்கத்தில் நண்பகல் 12.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.50 மணிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி விரைவு ரயில், ராமேஸ்வரத்திலிருந்து இரவு 08.50 மணிக்கு பதிலாக 08.55க்கு புறப்படும். திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி விரைவு ரயில் இரவு 10.30 மணிக்கு பதிலாக 10.45க்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி நெல்லை விரைவு ரயில் திருநெல்வேலிக்கு காலை 07.05 மணிக்கு பதிலாக 06.45 மணிக்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் கொல்லத்திலிருந்து முற்பகல் 11.45 மணிக்கு பதிலாக 11.55க்கு புறப்படும்.
செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை 06.15 மணிக்கு பதிலாக மாலை 06.10க்கு புறப்படும். திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் திருச்செந்தூரிலிருந்து முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…