சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613 ஆக அதிகரித்துள்ளது.மேலும் 192 நாடுகளுக்கு வேகமாக பரவிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,36,075 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஐ தொட்டுவிட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பள்ளி,திரையரங்கு,வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளை மார்ச்31.,வரை மூட முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டு இருந்தார்.தற்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இயங்கி வரும் சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச்., 31 வரை சிப்காட் ஆலைகள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தரப்படுவதாக தெரிவித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…