Minister Ponmudi - TN Governor RN Ravi [File Image]
சென்னை பல்கலைகழகம், கோவை பாரதியார் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய புதிய குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார்.
ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், நேற்று தமிழக அரசின் வலியுறுத்தலையும் மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்க ஆளுநர் தன்னிச்சையாக எடுத்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேர்வு குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டத்திற்கும் மற்றும் தமிழக அரசு விதிமுறைகளுக்கும் முரணானது என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…