Minister Ponmudi - TN Governor RN Ravi [File Image]
சென்னை பல்கலைகழகம், கோவை பாரதியார் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய புதிய குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார்.
ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வு குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில், நேற்று தமிழக அரசின் வலியுறுத்தலையும் மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டு இருந்தார். இந்த விவகாரத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்க ஆளுநர் தன்னிச்சையாக எடுத்த முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியால் அமைக்கப்பட்டுள்ள இந்த தேர்வு குழு முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டத்திற்கும் மற்றும் தமிழக அரசு விதிமுறைகளுக்கும் முரணானது என தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…