டிஎன்பிஎஸ்சி முறைகேடு விசாரணை.. பாட்டிக்கு திதி கொடுக்க வந்தோம் அப்படியே தேர்வு எழுதினோம்… அதிகாரியை மிரள வைத்த தேர்வர்களின் பதில்கள்..

Published by
Kaliraj
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம்.
  • நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் – 4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள  5,575 மையங்களில் சுமார் 16,29,865 போட்டியாளர்கள்  தேர்வு எழுதினர்.இந்த தேர்வில்  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு  நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியானது.

 

Image result for tnpscந்த தேர்வு முடிவுகளில் முதல் நூறு இடங்களில் நாற்பது இடங்கள் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், கீழக்கரை தேர்வுமையங்களை சேர்ந்த நாற்பது பேர் தேர்ச்சி அடைந்தது தமிழகம் முழுவதும் இந்த தேர்வில் முறைகேடு நிகழ்ந்துள்ளடு என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதில் தேர்ச்சியடைந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் அதிகமானவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் தற்போது  வெளியாகியுள்ளது. இதனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.இந்த தேர்வர்களின்  புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி கடந்த 13-ம் தேதி திங்கள் கிழமை காலை தொடங்கிய விசாரணை மறுநாள் வரை நீடித்தது. இந்த விசாரணையில், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏன்?, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியுள்ளனர் என்றும்.  எந்த சம்பந்தமும்  இல்லாமல் எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் நீங்கள்  தேர்ந்தெடுத்தீர்கள்?’ என அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்களில் அதிகபேர் எங்கள் பாட்டிக்குத் திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் செல்ல வேண்டியிருந்தது.

 

அதனால் அங்கேயே தேர்வு எழுதிவிட்டு அப்படியே போய் திதி கொடுத்துவிட்டு வந்தோம் எனப் பதில் அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த நாற்பது  தேர்வர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின்  செயலர், தேர்வுக் கட்டுப்பட்டு அலுவலர் ஆகியோர் தலைமையில் நாளை ஒரு ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது என்றும், அந்த ஆலோசனை கூட்டத்தின்  முடிவில் இது  குறித்தும்  சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Published by
Kaliraj

Recent Posts

3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

16 minutes ago

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

10 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

10 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

10 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

12 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

12 hours ago