டாஸ்மாக் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவானது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த 7 ஆம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன் 2 நாட்கள் மதுக்கடைகள் திறந்திருந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் சரியான சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என கூறி உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் திறப்பிற்குக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டன.
இந்த வழக்கில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் திறக்க தடைவித்து, ஆன்லைனில் மட்டுமே மது விற்கவும் அறிவுறுத்தியிருந்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது மனுவில் பிழை இருப்பதாக கூறிய நிலையில் தற்போது தமிழக அரசு தாக்கல் செய்த இந்த மனுவானது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…