ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என்ற முடிவு தற்காலிகமானதுதான் என்று முக ஸ்டாலின் நிலைப்பாடு.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக 4 மாதங்களுக்கு ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி வழங்கி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து, முக ஸ்டாலின் திமுகவின் நிலைப்பாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் இந்த முடிவு தற்காலிகமானதுதான் எனவும் கூறியுள்ளார்.
அதுவும் ஆக்சிஜன் தயாரிக்க மட்டுமே இந்த அனுமதி, வேறு எந்த நிலையிலும் ஆலையை இயக்கக்கூடாது. இதனை கண்காணித்திட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மக்கள் நலவாழ்வு துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும்.
மேலும் இந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் போராட்ட குழு மற்றும் சுற்றுசூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அனுமதியை வைத்து ஆலையை நிரந்தமாக திறக்க அனுமதி கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, தயாரிக்கப்படும் ஆக்சிஜன் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக வழங்கவேண்டும். அதுபோன்று, ஸ்டெர்லைட் ஆலை சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் தமிழக அரசு தான் மின்சாரம் வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…