திருநங்கை ஸ்மிதா தான் வரைந்த ஓவியத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார்.
இன்று பெற்றோர்கள் செய்த பாவத்திற்காக பிள்ளைகள் பலனை அனுபவிப்பது போல, பல இடங்களில் தவறான பெற்றோர்களாலும் சில இடங்களில் தங்களது சூழ்நிலை நிமித்தமாகவும் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் அதிகமானோர் உள்ளனர்.
இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பாங்கு அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இந்த மனம் வருவதுண்டு. அந்த வகையில், சென்னையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த திருநங்கை ஸ்மிதா, அவர் தான் வரைந்த ஓவியங்களை கொண்டு ஆதரவற்ற குழந்தைகளை தாங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் அந்த திருநங்கை தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சியாக அமைத்துள்ளார். ஓவியக்கலை அவருக்கு கைவந்த கலை போல மிகவும் அழகாக வரையும் திறமை கொண்ட அவர், தன்னுடைய ஓவியங்களை கண்காட்சியாக அமைந்தது மட்டுமல்லாமல், அதனை இணையதளம் மூலம் விற்பனையும் செய்கிறார்.
அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு, 11 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறார். திருநங்கை ஸ்மிதா ஆதரவற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் தனது திருநங்கை சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்வதோடு, திருநங்கைகளுக்கும் தன்னால் இயன்ற உதவியையும் செய்து வருகிறார். இவரது செயலுக்கு அப்பகுதியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…