வறுமை காரணமாக உடல் உறுப்பை விற்க துணிந்த போக்குவரத்து ஊழியர்.!

கடந்த 6 மாத கால சம்பளம் வழங்காததால் வறுமையில் வாடிய போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லையாம். எனவே வறுமையில் பல சிரமங்களுக்கு உள்ளான தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளார்.
கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்காததால் குடும்பம் வறுமையில் வாடி வந்த நிலையில் உடல் உறுப்பை விற்க துணிந்த தமிழ்ச்செல்வனை சந்தித்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆறுதல் கூறியதுடன், முதலமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சரிடம் சம்பளம் வழங்குவதை குறித்து பேச உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025