[Image Source : Twitter/@Udhaystalin]
தமிழக அமைச்சரவையில் புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33வது இடம்.
மன்னார்குடி தொகுதி எம்எல்ஏவும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு மகனுமான டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புதிய அமைச்சராக பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. இதில், புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர்கள் வரிசையில் 33வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ல் அமைச்சரவையில் இணைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் வரிசையில் 10வது இடம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் 28-ஆவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில், புதிததாக இணைந்துள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…
சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…